Skip to main content

கஜாபுயலில் முறிந்த மரங்களை அப்புறப்படுத்தும் தொண்டுநிறுவனம்

Published on 10/02/2019 | Edited on 11/02/2019
g

 

 

கஜா புயல் பாதித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் விவசாயிகளின் துயரம் தீர்க்கப்படவில்லை. அரசு முன்வரவில்லை என்றாலும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த முன்வந்திருப்பது ஆதரவாக இருப்பதாக விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வருவாய் தரக்கூடிய லட்சக்கணக்கான தென்னை, மா, முந்திரி,பலா, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் புயலால் பாதித்த வீடுகளை சீரமைக்கவும் முறிந்த மரங்களை அகற்றவும் பலஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் பணம் இல்லாமல் மரங்களை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர்.

 

 இந்த நிலையில் வேதாரண்யம் அடுத்துள்ள புஷ்பவனம் கிராமத்தில் முறிந்த பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன.   இந்தசூழலில்  இப்பகுதிகளை புணரமைக்கும் பணியை துவங்கியிருக்கிறது திருப்பூரை சேர்ந்த மத்திய அரிமா சங்கமும், இன்ஸ்பயர் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமும்.  இவ்விரு நிறுவனத்தினரும் இணைந்து புஷ்பவனம் கிராமத்தில் தோப்பில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றி  வருகின்றனர்.

 

அவர்களிடமே விசாரித்தோம், மரம் வெட்டும் 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மரம் அறுக்கும் எந்திரங்களை பயன்படுத்தி மிக விரைவாக இலவசமாக செய்துக்கொடுக்கிறோம்.  இதுவரை 500 ஏக்கர் பரப்பளவில் முடிந்திருக்கு.    இன்னும் 2000 ஏக்கருக்கு மேல் இருக்கிறது. அதற்கான  பணிகள் செய்ய உள்ளோம் . அதற்கு ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டோம் என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.