Skip to main content

அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தலாம்... -மின்வாரியம்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
thangamani


 

நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 30ம் தேதிவரை அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கஜா புயலினால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கடலோர மாவட்டங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 30 தேதி வரை அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

போர்க்கால அடிப்படையில் மின் சீரமைப்பு பணிகள் நடபெற்றுவருகின்றன. ஊரக பகுதிகளில் முழுமையாக மின் விநியோகம் முழுமையாக கிடைக்க ஒருவாரம் ஆகும், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உரிய நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்