புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று டெல்லி தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் சந்தித்தனர். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கிட டெல்லி தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 ஆயிரத்துக்கான கோசோலையை வழங்கினார்கள்.