Skip to main content

கஜாபுயல் நிவாரணத்தை வங்கிக்கடனில் வரவு வைக்கக்கூடாது... -விவசாயிகள்

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

 

கஜாபுயல் நிவாரணத்தை வங்கிக் கடனில் வரவு வைப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரி தமிழ் மாநில விவசாய கூலித் தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 

இதுகுறித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது. "கஜாபுயலால் நாகை திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம்  எல்லாம் இழந்து நிற்கதியான சூழலில் உள்ளனர். தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், அரசு தொகுப்பு வீடுகளுக்கும் குறைந்த அளவில் நிவராணமாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
 

விவசாயிகள் தமக்கு பெரியளவில் வருவாய் தந்த தென்னை மரங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வங்கி கணக்கில் ஏற்றப்பட்டு வருகிறது. அந்தத் தொகையை, மாணவ, மாணவியர்கள் மேல் படிப்பை தொடர வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடன், வீடு கட்டுவதற்கு வாங்கப்பட்ட கடன், கிராமப்புற பெண்கள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். தவணை தவறிய கடனுக்காக வீடு மற்றும் தென்னை மரங்களுக்கும் வழங்கப்படும். நிவாரணத் தொகையை வங்கியின் கடன் நிலுவைக்காக வரவு வைக்கின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
 

கந்து வட்டிக்காரன் போல் வரவு வைப்பது பாதிக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதாகும் கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டத்தில் நுண்கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் கடனை கட்ட நெருக்கடி கொடுத்த நிலையில் நாகை திருவாரூர். தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் ஆறு மாத காலத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் வசூல் செய்யக்கூடாது என தெரிவித்தும், செய்திகள் வந்தும் தற்போது நெருக்கடி கொடுத்து கடனை வசூலிப்பது வேதனையளிக்கிறது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வங்கிகளுக்கு புயல் நிவாரணத்தை கடனில் பிடித்தம் செய்யக்கூடாது என அறிவித்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைத் தேனீக்கள் கொட்டி விவசாயி உயிரிழப்பு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Farmer incident by mountain bees

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வாரப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த பணி காரணமாக காப்பிலியபட்டிக்கு வருகை தந்துள்ளார். பின்னர் தனது பணிகளை முடித்துக் கொண்டு கல்வாரப்பட்டிக்கு திருப்பிக் கொண்டிருந்துள்ளார்.

இவர் மா.மு. கோவிலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இருந்த தேன் கூடு கலைந்து ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியேறியுள்ளன. இந்த தேனீக்கள் சாலையில் சென்று கொண்டிருந்த விவசாயி காளியப்பனை கொட்டியுள்ளன. இதனால் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவ்வழியே சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 8க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.