Advertisment

கஜா புயல் நிவாரண நிதிக்கு சிபிஎம் சார்பில் 10 லட்சம் 

g

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் சிபிஐ (எம்) தலைவர்கள் இன்று (3.12.2018) பகல் 12 மணிக்கு தமிழக முதலமைச்சரிடம் நேரில் வழங்கவுள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் இன்று (03.12.2018) பகல் 12.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கவுள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சி அணிகளிடமிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

gaja storm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe