Skip to main content

கஜா கரையை கடந்தும் குறையாத கடல் சீற்றம்

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
c

 

கடலூர் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவு  பல்வேறு பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தால் பலத்த மழை கொட்டியது. கஜா புயல்  முன்தினம் நாகப்பட்டினம்  வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது.

 

  இதனால் கடலூர் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவு பலத்த சத்தத்துடன் காற்று வீசியது. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தது. சில இடங்களில் மரங்கள் சாய்தன. கஜா புயலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர் நெய்வேலி, காட்டு மன்னார்கோவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது.

 

c

 

இந்நிலையில் கஜா புயலுக்கு கடலூர் மாவட்டத்தில் 3 பேர் பலியானார்கள். வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

 

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறிஞ்சிப்பாடி பெரு மாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்த போது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் அருகே  மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

 

பண்ருட்டி அருகே நடுகுப்பத்தைச் சேர்ந்த ரங்கநாதன் இவர்  என்எல்சி ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிகிறார் அதிகாலையில் பணிக்கு செல்லும்போது சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்ததால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

 

சாலையில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

 ஆனால் நெய்வேலி சுரங்க நீர் வினாடிக்கு 2ஆயிரம் கன அடி  வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் வாலாஜா  ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பரவனாறு வழியாக பெருமாள் ஏரிக்கு  2 ஆயிரம் கன அடியும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பெருமாள் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 6 அடியாக உள்ளது. இதன் முழு கொள்ளளவு 6.5 அடியாகும். வாலாஜா ஏரியில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாம் இட்டு  இதை கண்காணித்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை அருகே  சாமியார்பேட்டையில் மீனவர்கள் வலை உலர்த்தும் கூடத்தின் மேற்கூறை தகடுகள் காற்றில் விழந்தன. பரங்கிப்பேட்டை படற்கரை பகுதியில் கடல்சீற்றம் வெள்ளிக்கிழமை மாலை சீற்றத்துடன் இருந்தது.

 

இந்தநிலையில் வியாழன் இரவு வடக்குத்து பகுதியில் 146 மிமீயும், குறிஞ்சிப்பாடியில் 128மிமீயும், விருத்தாசலத்தில் 118மிமீயும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 62.80மிமீயும், பரங்கிப்பேட்டையில் 62மிமீயும், சிதம்பரத்தில் 54.10மிமீயும், புவனகிரியில் 51மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 40மிமீயும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்தில்  அதிக அளவில் மழை பெய்துள்ளது. கிள்ளை அருகே சிங்ககாரகுப்பம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொக்ளின் இயந்திரம் மூலம் வடியசெய்தனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.