Skip to main content

விளை நிலங்களில் குழாய் பதிக்க கெயில் நிறுவனம் நோட்டிஸ் ஒட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு

Published on 17/03/2018 | Edited on 17/03/2018


 

gail-pipeline

 
விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டம் குறித்து ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகங்களிலும் எண்ணை நிறுவனம் சார்பில்  நோட்டிஸ் ஒட்டப்பட்டிருப்பது  விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்துடன் கூடிய கோபத்தை உண்டாக்கியுள்ளது. விரைவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
 

 நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களில் கடந்த 2013ம் ஆண்டு எண்ணை நிறுவனம் சார்பில் ’மாதானம் திட்டம்’ என்றகிற  பெயரில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து துரப்பன பணிகள் நடந்துவருகிறது.  அதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தின் மூலம் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
 

 இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7  கிணறுகளை அமைத்து நாள்தோறும் சுமார் 20 லாரிகளில்  கட்சா எண்ணை எடுத்துசெல்கின்றனர்.  இந்த கிணறுகளின் வாயிலாக ரசாயன கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால்  சுற்றியுள்ள  30 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள்  சாகுபடி செய்ய முடியாமல் பாலைவனம் போல கிடக்கிறது. குடிநீருக்காக மக்கள் அகதிகளை போல தேடி செல்லவேண்டிய நிலையும் உறுவாகிவிட்டது. 
 

இந்தநிலையில் பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எண்ணை குழாய்களை அமைக்க திட்டமிட்டு அதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 
 

 நிலத்தை கையகப்படுத்துவதற்கு தொடர்பான விவரங்களை கெயில் நிறுவன அதிகாரம் பெற்ற அலுவலர் கையொப்பம் இட்ட நோட்டீஸ் பொதுமக்கள் பார்வையில் படும்படி  ஒவொரு கிராம நிர்வாக அலுவலங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட  பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி கிராம விவசாயிகளிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

gail-pipeline

     
வேட்டங்குடியை சேர்ந்த நஞ்சை, புன்செய் விவசாய சங்க    தலைவர் வில்வநாதன் கூறுகையில்,’’ பழையபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணைய் நிறுவனம்  வேட்டங்குடி கிராமத்தில் இருவக்கொல்லை என்ற இடத்தில் எண்ணை கிணறுகள் அமைத்துள்ளது. அந்த கிணறால் அந்த பகுதி விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன. தற்போது, பழையபாளையத்திலிருந்து விவசாய விளைநிலங்களின் வழியாக தரங்கம்பாடிக்கு எடுத்து செல்லும் வகையில் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டு, அதனை கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நோட்டிஸாக ’நிலம் கையகப்படுத்தப்படும்’ என்று நோட்டீஸாக ஒட்டியுள்ளனர். விளைநிலங்களை கெயில் நிறுவனம் கையகப்படுத்த நினைத்தால் பொதுமக்கள் விவசாயிகள் என ஒன்று திரண்டு தொடர் போராட்டம் நடத்துவோம், அதற்கான வேளைகளில் ஈடுபட்டுவருகிறோம்.’ என்றார்.
 

’’ஆட்டை கடித்து, பிறகு மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்தக்கதை என கிராமத்தில் பழமொழி உண்டு. அது போல கதையாகத்தான் ஒ.என்.ஜி.சியின் கதையும் இருக்கிறது. முதலில் மாதானம் திட்டம் துவங்கும் போது 7 கிணறுகள் மட்டும் தான். அதற்கு மேல் இல்லை என்றனர். அதோடு எடுக்கும் எண்ணைகளை லாரிகள் மூலம் எடுத்து செல்வோம், விளைநிலங்களில் குழாய் பதிக்கமாட்டோம் என்றனர். ஆனால் இன்று புதிய கிணறுகள் அமைப்பதோடு, நிலங்களுக்கு அடியிலும் குழாய் பதிக்கதுவங்கிவிட்டது.’’ என்கிறார் பெரியார் திராவிடர் கழக மா,செ. பெரியார் செல்வம்.
 

க.செல்வகுமார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெயில் குழாய் பதிப்பு; ஓபிஎஸ் -ஸை கண்டித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

'' Does the OPS know anything? '' - Minister Thangam thennarasu Condemning

 

கடந்த 17 ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு பகுதியான ஓசூர் அருகே கெலமங்கலத்தில் விளைநிலங்களில் குழி தோண்டப்பட்டு, எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதைத் தமிழ்நாடு முதல்வர் தடுத்து, விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரம் இந்த எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தற்போது விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

 

இந்நிலையில் ஓபிஎஸ்-ஸின் அறிக்கைக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். அதில், ''அதிமுக ஆட்சியில்தான் கெயில் நிறுவனம் கிருஷ்ணகிரியில் எரிவாயு குழாய் பதித்தது. உண்மை இதுவாக இருக்க எதுவும் அறியாதது போல் ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார். தற்பொழுது புதிதாகச் செயல்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கெல்லாம் சாத்தியக்கூறு உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலையின் ஓரத்தில் குழாய் பதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

'குழாய் மூலம் இயற்கை எரிவாயு'- நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

Kochi-Mangaluru natural gas pipeline pm naredra modi

 

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

 

ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூபாய் 3,000 கோடி மதிப்பில் கொச்சி - மங்களூரு இடையே சுமார் 450 கி.மீ. வரையிலான குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கர்நாடகா மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டனர். 

 

12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு, கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களைக் கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.