Skip to main content

நண்பர்களின் தோளில் இறுதி ஊர்வலம்; வாலிபாலுடன் அடக்கம் செய்யப்பட்ட ஆகாஷ் உடல் 

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

A funeral procession on the shoulders of friends; Akash's body buried with volleyball

 

திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாலிபால் வீரர் ஆகாஷ். இவர் நேபாள நாட்டிற்கு வாலிபால் விளையாடுவதற்காகச் சென்றுள்ளார். 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் தமிழக அணி வெற்றி பெற்றது. இதன் பின் ஓய்வு அறைக்குச் சென்ற ஆகாஷிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆகாஷின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தகவலை அறிந்த ஆகாஷின் பெற்றோர் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆகாஷின் உடலைத் தமிழகம் கொண்டு வருவதற்காகவும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்திலிருந்து ஆகாஷின் உடலைத் தமிழகத்திற்குக் கொண்டு வர வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 

இதன் பின் ஆகாஷின் உடல் இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆகாஷின் உடலுக்கு அமைச்சர் நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.  இன்று மாலை 5 மணியளவில் வீரர் ஆகாஷ் உடலை, சக வாலிபால் வீரர்கள் சுமந்து சென்று வாலிபாலுடன் நல்லடக்கம் செய்தனர். நண்பர்கள், உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆகாஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி; அனுமதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

marina beach volley ball admission announcement tamilnadu govt

 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023’ மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது.

 

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினருக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகளும்  நடத்தப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து ‘முதலமைச்சர் கோப்பை - 2023’ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

 

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளன. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளைக் காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட வீரர்கள் 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

all india level volleyball match stated karur

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்களுக்கான 63 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் பெண்களுக்கான 9 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் இன்று துவங்கி ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டு விளையாட உள்ளார்கள்.

 

இந்தியன் கடற்படை அணி, லோனா வில்லா திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணி, புதுடெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி மற்றும் புதுடெல்லி இந்திய விமானப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொள்கின்றனர். ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும். பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெறும். இப்போட்டி வருகிற 27 ஆம் தேதி நடைபெறும்.

 

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணியும், புதுடெல்லி ரயில்வே அணியும் மோதியதில் 78க்கு 65 என்று புள்ளி கணக்கில் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணி வெற்றி பெற்றது. பெண்களுக்கான போட்டியில் நார்த் அண்ட் ரயில்வே அணியும் கேரளா போலீஸ் அணியும் மோதியதில் 71க்கு 50 என்ற புள்ளி கணக்கில் நார்த்தன் ரயில்வே அணி வெற்றி பெற்றது. மேலும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்க உள்ளார்.