Skip to main content

இலங்கையில் கல்வியும், மருத்துவமும் அரசே தருகிறது. – கலெக்டர் ராமன் பேச்சு.

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

பள்ளிகளின் அரசு பொதுத்தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, விருது மற்றும் பள்ளிகளுக்கு மேசைவழங்கும் விழா வேலூர் விஐடி பல்லைக்கழகத்தில் உள்ள சென்னாரெட்டி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஸ்வநாதன், "விஐடி 16 ஆம் ஆண்டாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்திவருகிறது.

 

function at vit college vellore

 

வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. விஐடி ஸ்டார்ஸ் என்கிற திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் முற்றிலும் கட்டணம் ஏதுமின்றி கல்வி பயில்கிறார்கள். தற்போது இந்த மாணவர்கள் அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். ஒரு நாடு கல்வியில் முன்னேறினால் தான் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேற்ற முடியும். வளர்ந்த நாடுகளான ஜப்பான் மற்றும் கொரியாவுடன் நாம் போட்டி போட வேண்டும். முன்னேறிய நாடுகளில் குற்றம் விகிதங்கள் குறைவாக உள்ளன, அதற்கு காரணம் கல்வி.

அரசு மற்றும் தனியார் துறைகளில் மாதம் சம்பளம் வாங்கி வேலை செய்கிறார்கள். ஆனால் மருத்துவம் மற்றும் கல்விதுறையில் இருப்பவர்கள் வேலைக்கு பதிலாக சேவையாக செய்து வருகிறார்கள். பொதுவாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துக்கொண்டு தான் வருகிறது. இந்த நிலைமை மாற வேண்டுமானால் அரசு பள்ளிகளின் தரத்தை நாம் உயர்த்த வேண்டும். இந்தியாவில் 65 சதவிதம் பேர் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்.

தற்போது ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பள்ளி கல்வியில் அக்கறை கொண்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன் இந்த பற்றாக்குறையை களைய வேண்டும். அரசு பள்ளிகளின் அரத்தை உயர்த்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க போதிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கல்வியில் கல்லூரிகளில் முறையாக கல்வி பயிலாமல் சான்றிதழ் பெறுகிறார்கள். இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயரவேண்டும்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேசும்போது, தமிழகம் உலகளவில் கல்வியில் போட்டி போட வேண்டும். மருத்துவம் மற்றும் பள்ளிக்கல்வி துறையை இலங்கையில் அரசு தான் நடத்திவருகிறது. இந்தியாவிலும் அப்படி அரசாங்கமே ஏற்று கல்வியையும், மருத்துவத்தையும் தரவேண்டும் என பேசினார். மேலும், மாணவர்களுக்கு எளிமையான வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும், பாடம் சொல்லி கொடுப்பதை கடமையாக எண்ணாமல், தெய்வபணியாக எண்ண வேண்டும் என்றார்.

இந்த விழாவில் மாவட்டத்தில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற 69 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருதும், 5000 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 22 லட்ச ரூபாய் செலவில் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மேசை மற்றும் நாற்காலிகளை பல்கலைகழகம் சார்பில் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.