இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றே சென்னை கோயம்பேடு மர்க்கெட்டில் காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர்.