Skip to main content

நிர்வாண குளியலை வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதால் ஆத்திரம் -  வாலிபரை எரித்துக்கொன்ற நண்பர்கள்! 

Published on 07/07/2018 | Edited on 07/07/2018
tho

 

ஆற்றில் நண்பர்களில் குளியலை படம் எடுத்த நண்பரை எரித்து கொன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

திருச்சி மாவட்டத்தின் எல்லை பகுதியான தொட்டியம் ஏரியாவில் திருநாராயணபுரம் காவிரி ஆற்றங்கரையில் கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் ஓர் ஆண் உடல் இருப்பதாக காட்டுபுத்தூர் போலிசுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கடந்த வாரம் அரசலூரில் உள்ள காவிரி ஆற்றில் அந்த ஏரியா பசங்களுக்கு இடையே அடிதடி பிரச்சனை நடந்து என்று முதல் கட்ட தகவல் பொதுமக்கள் மூலம் கிடைத்திருக்கிறது. 

 

இதன் அடிப்படையில் அரசலூரில் விசாரணையில் துவங்கினர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த விமல் என்பவருடன் அந்த ஏரியா பசங்களோடு சண்டை நடந்தது என்று சொல்லவும் அந்த ஆற்றங்கரையில் சென்று பார்த்ததில் அங்கங்கே தரையில் ரத்தம் சிந்தி கிடந்தது. உடனே விமலை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலில் விசாரணையில் விமல் கொடுத்த வாக்குமூலம் போலிசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. 

 

tho1

 

திருநாராணயபுரத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடல் நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி கணபதி நகரை சேர்ந்த சதிஷ் ஆவார். இவர் லோடு ஆட்டோ ஓட்டுபவர். இவர்களோட நண்பர்கள் வசந்த், ராஜேஸ்குமார், சிவசங்கரன், எல்லோரும் கடந்த 3ம் தேதி பைக்கில் மது அருந்திவிட்டு அந்த ஆற்றங்கரையில் இறங்கி குளித்திருக்கிறார்கள். அந்த பகுதியில் ஜன நடமாட்டமே எதுமே இல்லை. குளிப்பதற்கு எந்த முன்னேற்பாடு எதுவும் இல்லாமல் வந்ததால் கையில் குளிப்பதற்கான டவல் எதுவும் எடுத்து வரவில்லை. இருந்தாலும் உடைகளை களைந்து விட்டு வெறும் உடம்புடன் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

 

அப்போது கணபதி,  நண்பர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் - அப்பில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த நண்பர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. கடைசியில் நிர்வாண குளியல் வீடியோ வெளியான ஆத்திரத்தில் கணபதியை சரமாரியாக ஆத்திரத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளனர். கடைசியில் கட்டையினால் அடித்தும் கத்தியினால் குத்தியதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கணபதி உடலை அங்கிருந்து பைக்கில் 7 கிலோமீட்டர் தூக்கி கொண்டு வந்து திருநாராயணபுரம் ஆற்றுப்பகுதியில் கொண்டு வந்து இருட்டிய பிறகு முட்புதரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். யாருக்கும் தெரியாதது என்று நினைத்துள்ளனர். ஆனால் மறுநாள் ஊரில் உள்ள எல்லோருக்கும் இது எப்படியே தெரிந்து விட்டது. 

 

மேலும், வாக்குமூலத்தில் சதீஷ், தன்னோட நண்பர்கள் எல்லோரும் நாமக்கலில் இருக்கிறார்கள் என்று தகவல் சொல்ல, அதன் அடிப்படையில் நண்பர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

 

 நிர்வாணகுளியல் படம் எடுத்து கொலையில் முடிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

‘நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?’ - இதயம் நொறுங்க வைத்த சம்பவம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

friend who wandered while keeping him in a trolley' - a heartbreaking incident

 

மேம்பாலத்தில் சுயநினைவின்றிக் கிடந்த தனது நண்பரைத் தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனை நோக்கித் தள்ளிக்கொண்டு வாலிபர் ஒருவர் ஓடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இப்படி தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு செல்வதாக அந்த வாலிபர் பேசும் அந்த வீடியோ காட்சி காண்போரின் இதயத்தைக் கலங்கடிக்க வைக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது வேலை எதுவும் கிடைக்காததால் ஆறுமுகம் ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த ஆறுமுகம் உடல் நலிவுற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த சுரேஷ், உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார்.

 

ஆனால் சுரேஷிடம் செல்போன் இல்லாததால், 108க்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களும் உதவி செய்யாததால் தன்னிடமிருந்த தள்ளுவண்டியில் அவரை வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்றுள்ளார். பாலம் ஒன்றின் வழியாகச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் 'ஏன் இப்படி தள்ளிக்கிட்டு போறீங்க' எனக் கேட்க, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்வதாக வண்டியைத் தள்ளிக்கொண்டே அவர் பரபரப்பாகப் பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில்  வைரலாகி வருகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தன் வாகனத்தை வைத்து தள்ளுவண்டியை உந்த வைத்து அவருக்கு உதவி புரிந்தார். ஒருவழியாக தன்னுடைய நண்பரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார் சுரேஷ்.

 

 

Next Story

கால்வாயில் இருந்த சிவனடியாரின் சடலம்; வெளியான பகீர் வாக்குமூலம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

two man incident his friend while drunk in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருப்புசாமி புதூர். இங்குள்ள அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத அளவில் சிவனடியார் வேடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

 

இதற்கிடையில், சடலமாக இருந்தவரின் முகம் மற்றும் தலையில் பலத்த ரத்தக் காயம் இருந்துள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், இறந்து கிடந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான மதியழகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த போலீசார், அவர் தங்கியிருந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அப்போது, அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத இருவரும், பல்வேறு உண்மைகளைக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட போலீசார் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

கொலை செய்யப்பட்ட மதியழகனும் பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதியன்று மதியழகன், பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இரும்புக் கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம், போதையில் இருந்தவர்கள் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

அப்போது, தலைக்கேறிய போதையில் இருந்த மதியழகன் ஸ்ரீமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் அங்கிருந்த கட்டையால் மதியழகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அது போதாதென்று பக்கத்தில் இருந்த கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இதற்கிடையில், தாங்கள் அடித்ததில் மதியழகன் இறந்துவிட்டதால் ஸ்ரீமுருகனுக்கும் பட்டுப்பாண்டிக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதியழகனின் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். அதன்பிறகு, மதியழகனின் உடலை ரெக்சின் கவரால் சுருட்டி டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கருப்புசாமிபுதூர் பகுதிக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, இருவரும் தப்பித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

 

இதையடுத்து, ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரம், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.