Skip to main content

நண்பரின் மனைவியை கடத்திய வாலிபர்... குழந்தைகள் அழுவதை பார்த்து...

Published on 11/10/2019 | Edited on 11/10/2019


 

நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டிட பணிகளுக்கு செல்லும்போது அந்த தொழிலாளிக்கு ஒரு வாலிபருடன் நட்பு கிடைத்தது. தனக்கு வேலை இல்லாதபோது, எங்காவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று அந்த வாலிபரிடம் சொல்லி வைத்து அங்கு வேலைக்கு சென்று வருவார். இந்த அளவுக்கு பழக்கம் ஏற்பட்டததால், அந்த வாலிபர் வீட்டுக்கு வந்து செல்ல தொடங்கினார்.


 

mind changed


 

வீட்டுக்கு வரும் வாலிபர் தொழிலாளியின் குழந்தைகள் மற்றும் மனைவியிம் அன்பாக பேசி வந்தார். நாளடைவில் தொழிலாளி வீட்டில் இல்லாத நேரத்திலும் அந்த வாலிபர் வரத்தொடங்கினார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அந்த தொழிலாளியிடம் தெரிவித்தனர். அவர் மனைவியின் மாற்றத்தை கண்டு அதிர்ச்சியானதுடன், கண்டிக்கவும் செய்தார். 


 

அந்த வாலிபரை சந்திக்காமல் இருந்த தொழிலாளியின் மனைவி திடீரென மாயமானார். மாயமான மனைவியை பல இடங்களில் தேடி பார்த்த அந்த தொழிலாளியிடம், அக்கம் பக்கத்தினர் உங்களுடன் பழகிய அந்த வாலிபர் எங்கே, அவரது செல்போனை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அநத் வாலிபரை பற்றி விசாரிக்கும்போது அந்த வாலிபரும் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தொழிலாளி நடந்த விவகாரங்களை மார்த்தாண்டம் போலீசில் சொல்லி புகார் செய்தார். புகாரில் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர், தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
 

மார்த்தாண்டம் போலீசார் இது பற்றி விசாரணை நடத்தினர். மாயமான இருவரையும் ராஜாக்கமங்கலம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்ததும் அவர்களை அழைத்து வந்தனர். அந்த தொழிலாளிக்கும் தகவல் சொல்லி அனுப்பினர். 


 

அந்த பெண்ணின் கணவர் தன்னுடன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். காவல்நிலையத்தில் அந்த பெண்ணிடமும் வாலிபரிடமும் போலீசார் அறிவுரை கூறினர். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த பெண்ணிடம், குழந்தைகளை அழைத்து வந்து காண்பித்தார். அப்போது அந்த பெண்ணின் குழந்தைகள் அழுதுகொண்டே தங்களுடன் வருமாறு அழைத்தனர். குழந்தைகளின் அழுகையை கண்டு மனம் மாறிய பெண், கணவருடன் செல்ல தயாரானார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இனியாவது குடும்பத்துடன் இணைந்து வாழுமாறு போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர். அந்த வாலிபருக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.