Skip to main content

நண்பனை குத்தி கொலைசெய்து வீட்டு வாசலில் புதைத்த நண்பர்கள்; காரைக்காலில் பரபரப்பு

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

இரண்டு வாலிபர்கள் சேரந்து நண்பனை கொலை செய்து வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

காரைக்கால் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ், அவரது மகன் ஹாஜாஷெரிப், இவரை சில நாட்களாக காணவில்லை, என பதறிய அவரது பெற்றோர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து ஹாஜாஷெரிபை தேடிவந்தனர். அவரது நண்பர்களே கொலை செய்ததாக தகவல்கள் காரைக்கால் முழுவதும் கசியத் தொடங்கின. 

 

murder

 

சந்தேகத்தின் பேரில் நண்பர்களான காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவநேசன் 28, ஆனந்த் 26, ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவா, விவேக் ஆகியோருடன் சேர்த்து ஹாஜாஷெரிபை அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு புதைத்ததாக தெரிவித்து பகீர்கிளப்பினர்.

 

அவர்கள் காவல்துறை விசாரணையில் கொலை செய்தது ஏன் என்று கேட்டபோது, " கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வா என்பவன் காரைக்கால் கோட்டுச்சேரி அருகே நந்தா நகரில் நண்பர்களுடன் தங்கி ரேடியாலஜி படித்து வருகிறான். செல்வாவும் சிவாவும் நண்பர்களாக பழகினர்.  அதனால் சிவாவும் அவரது நண்பர்களான விவேக், சிவசேனான், ஆனந்த், ஷெரீப் உள்பட நான்கு நண்பர்களும் அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

 

murder

 

விவேக் மற்றும் ஹாஜாஷரிப் மீது காரைக்கால் பகுதியில் திருட்டு, கொள்ளை வழக்குகளும் உள்ளன. இவர்கள் இருவரும் சிறையில் இருந்தபோது இருவரில் யார் பெரியவன் என்கிற போட்டி ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் ஜாமீனில் வெளியே வந்ததும், வழக்கம்போல மது அருந்தும் இடத்தில் சிறையில் ஏற்பட்ட போட்டி குறித்து மற்றொரு நண்பன் சிவாவிடம் விவேக் கூறியிருக்கிறான். இதை பெரிதுபடுத்தாமல் அவனும் நம்ம நண்பன் தானே என்று விட்டு விட்டான். 

 

 police

 

சில வாரங்களுக்கு முன்பு நந்தா நகரில் உள்ள வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தனர். யார் பெரிய ஆள் என்கிற போட்டி அங்கு ஏற்பட்டு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சிவா ஆனந்த் உள்ளிட்டோர் அங்கிருந்து கட்டையாலும், சரமாரியாக கத்தியாலும் குத்தி கொலை செய்து புதைத்தோம்." என்று அதிர்ச்சி கரமாக கூறினர்.

 

இரண்ட பேரையும் போலீசார் அழைத்து சென்று உடல் புதைக்கப்பட்ட இடத்தை காட்ட செய்து, தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு,அங்கேயே கூராய்வு செய்து செய்தனர்.

 

இந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.