Skip to main content

போதை படுத்தும் பாடு; நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

friends people who incident her friend while intoxicated

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது சிவக்கொழுந்து. இவர் கடந்த 29ஆம் தேதி இரவு கடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அவரது நிலையைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததை கண்ட அவரது குடும்பத்தினர் அவரைப் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிவக்கொழுந்து.

 

விபத்தில் சிக்கிக் கிடந்தது குறித்து சிவக்கொழுந்து மனைவி எழிலரசி தனது கணவர் காடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார் அந்த நேரத்தில் அவர் எப்படி விபத்தில் சிக்கினார் அவரது உடலில் உள்ள காயங்கள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்கொழுந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லாஹ், இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சிவக்கொழுந்து சாலை விபத்தில் காயமடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதாக கண்டுபிடித்தனர். 

 

மேலும், சிவக்கொழுந்து அவரது நண்பகள் காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த கார்மேகம், பொக்லின் ஆபரேட்டர் அபினேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29ஆம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் சென்று அமர்ந்து மது அருந்தி உள்ளனர் அப்போது மது சாப்பிடுவதற்கு சைடிஸ்ஸாக கறி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிடும் போது மூவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்மேகம் அபினேஷ் இருவரும் சிவக்கொழுந்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் சிவக்கொழுந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் சிவக்கொழுந்துவை கொண்டு வந்து விபத்தில் காயம் அடைந்ததாக காட்டுவதற்காக சாலையில் போட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை  கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. கொலையில் சம்பந்தப்பட்ட கார்த்திகேயன், அபினேஷ், கார்மேகம், ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கார்மேகம் அபினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மது போதை நண்பனை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.