Skip to main content

நண்பனின் தங்கைக்கு காதல் வலை வீசிய நண்பன்... காரில் கடத்தி சென்று அடித்த நண்பர்கள்!! 

Published on 24/06/2021 | Edited on 24/06/2021
The friend who threw the love web to the friend's sister ... the friends who kidnapped through the car

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது வி.எஸ்.கே.நகர். இங்கு வசிப்பவர் சரவணன், இவரது மகன் விஷால் டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கும் விழுப்புரம் கம்பன் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜிலு என்பவரது மகன் மிதுன்(20) என்பவருக்கும் இடையே செல்போன், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பிறகு நண்பர்களாக மாறினார்கள். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம் நெருக்கமாய் மாரியதும் அவ்வப்போது மிதுனை சந்திப்பதற்காக விஷால் அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அங்கு பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மிதுனின் தங்கையுடன் விஷாலுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மிதுன் விஷாலை கண்டித்துள்ளார்.

 

‘நண்பனாக எண்ணி என்னோடு என் வீட்டுக்கு வந்து செல்லும் அளவிற்கு உனக்கு உரிமை அளித்தேன், ஆனால் எனக்கு துரோகம் செய்யும் அளவில் விவரம் அறியாத என் தங்கைக்கு காதல் வலை விரிக்கலாமா? இது நண்பனுக்கு துரோகம் செய்வது போல் இல்லையா? என்று கண்டித்துள்ளார்’. ஆனால் அதன் பிறகும் விஷால் மிதுன் தங்கையுடன் பேசி பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் கோபமுற்ற மிதுன் நேற்று முன்தினம் ஒரு காரில் திருவெண்ணைநல்லூர் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே விஷாலுக்கு போன் செய்து நான் திருவெண்ணெய்நல்லூர் வந்துள்ளேன் உன்னை பார்க்கவேண்டும் என்று கூறி அவரை வரவழைத்துள்ளார். மிதுன் இருந்த இடத்திற்கு அவரை சந்திக்க விஷால் சென்றுள்ளார். அங்கே திருவெண்ணைநல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் விழுப்புரம் கீழ் பெரும்பாக்கத்தை சேர்ந்த பக்கிரிமகன் கணேஷ் மேலும் நான்கு நண்பர்களுடன் அங்கு காத்திருந்தனர்.

 

இவர்கள் அனைவரும் சேர்ந்து விஷாலை காரில் கடத்தி சென்றுள்ளனர். திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே மறைவான இடத்தில் காரை நிறுத்தி விஷாலை காரிலிருந்து இறங்கி மிதுன் உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விஷாலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் விஷால் படுகாயமடைந்து அவர்களிடமிருந்து இருந்து தப்பி சென்று தனது நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக விஷாலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் இது தொடர்பாக விஷால் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் மிதுன் உட்பட அவரது நண்பர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் மூவரை கைது செய்துள்ளனர். மிதுனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும்  போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.