Skip to main content

விவசாய டிராக்டர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த நபர் கைது...

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Friend cheat his friend tractor


விழுப்புரம் மாவட்டம் தெளி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் பிரபு இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேர் சத்யா நகர் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனி நடத்திவரும் நிஷாந்த் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரபுவிடம் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள டிராக்டர் கம்பெனியில் இருந்து சுமார் 6 லட்சம் மதிப்பிலான டிராக்டரை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக நிஷாந்த் கூறியுள்ளார். 


இதை நம்பிய பிரபு, கடன் வாங்கி 6 லட்ச ரூபாய் பணத்தை நிஷாந்திடம் கொடுத்துள்ளார். ஆனால், நிஷாந்த் கூறியபடி பிரபுவுக்கு டிராக்டர் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பிரபு இதுகுறித்து நிஷாந்திடம், பலமுறை பணம் கேட்டு வந்துள்ளார். அவர் பணமும் கொடுக்கவில்லை. டிராக்டரும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை ஏமாற்றும் நோக்கத்தில் நிஷாந்த் நடந்துகொண்டுள்ளார். சமீபத்தில் பிரபு நிஷாந்திடம் பணம் கேட்கச் சென்றபோது, அவரது மனைவி காயத்ரியும் நிஷாந்த் உடன் சேர்ந்து பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பிரபு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். எஸ்.பி., பிரபுவின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் போலீஸார் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் பலி; புனித நீராடச் சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The tragedy that happened when I went to take a holy bath and 15 passed away in tractor overturn

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புனித நீரான கங்கை நதியில் ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் நிகழும் மகா பெளர்ணமி தின நாளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் ஏராளமானோர், மகா பெளர்ணமியை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று (24-02-24) காலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தடுக்கும் முயற்சியில் டிராக்டர் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார். ஆனால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 சிறுவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். கங்கை நதியில் புனித நீராடச் சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
15 lose their live as tractor overturns in pond

உ.பியில் டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை டிராக்டரில் ஏற்றிச் சென்ற பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டரில் மக்களை ஏற்றிக் கொண்டு கங்கை நதியில் புனித நீராடல் நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது குளத்திற்கு அருகே உள்ள சாலை பகுதியில் சென்ற டிராக்டர்  திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்தது. இதில்  டிராக்டரில் பயணித்த அனைவரும் குளத்தில் மூழ்கினர். இதில் முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்ததும் அந்த பகுதிக்கு விரைந்த மக்கள் மற்றும் மீட்புப் படையினர் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கங்கை நதியில் புனித நீராட சென்றவர்கள்  குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.