Advertisment

நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச அரிசி - தமிழக அரசு அறிவிப்பு!

்ு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் இருந்து வருகின்றது. மக்களின் வாழ்வாதாரம் கடந்த மூன்று மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு இலவச அரிசி வழங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலை மாதமும் இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதற்கிடையே தற்போது நவம்பர் மாதம் வரையில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Ration card
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe