Skip to main content

கோவை அம்மா உணவகங்களில் ஜூன் 30 வரை இலவச உணவு நீட்டிப்பு!- அமைச்சர் வேலுமணி மீண்டும் ஏற்பாடு     

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
Free food extension at Coimbatore amma restaurants till June 30 - Minister Velumani

 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஜுன் 30 ஆம் தேதி வரை 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க  நாடு முழுவதும் 5 - ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கும் சூழலில், 5 ஆம் கட்ட ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. 


இந்த  நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 அம்மா உணவகங்களும், கோவை மாவட்டத்திற்குள் அடங்கிய வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு அம்மா உணவகமும் இயங்குகிறது. இந்த 15 அம்மா உணவகங்களில் தினமும்   3 வேளைகளும் 20,000- க்கும் மேற்பட்டோர் சாப்பிடுவதாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.  வேலுமணி ஏற்பாட்டில்,  ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால்  கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியை இன்று ( 1.6,2020 ) சந்தித்த அமைச்சர் வேலுமணி, "மாவட்டத்திலுள்ள 15 அம்மா உணவகங்களிலும் ஜூன் 30 வரை  இலவச உணவுகளை மூன்று வேளையும் வழங்கப்பட வேண்டும். 

இதில் எந்த சுணக்கமும் இருக்கக் கூடாது. அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பணிபுரிய வேண்டும்" என்று அறிவுறுத்திய வேலுமணி, கடந்த  மே 31 ஆம் தேதி வரை இலவச உணவுகள் வழங்கப்பட்டதற்கானசெலவுத் தொகை  61 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயும்,  ஜுன் மாதம் 30 வரை இலவச உணவு வழங்குவதற்கான முன் பணம் ரூபாய் 25 லட்சமும் என மொத்தமாக  86 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்கினார் அமைச்சர் வேலுமணி.  அவருடன் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

 

 


ஊரடங்கு முடியும் வரை கோவை மாவட்ட அம்மா உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான செலவை மாவட்ட அதிமுக ஏற்கும் என்கிற உறுதியையும் கலெக்டர் ராசாமணியிடம் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி. அம்மா உணவகங்கள் மூலம் தொடர்ந்து இலவச உணவு வழங்குவதை நிறைவேற்றி வரும் அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட அமைச்சருக்கும், அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.