Skip to main content

இலவச பேருந்து பயணமும், தங்கதேரும் – ரஜினி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ரஜினியின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், கோயிலில் சிறப்பு பிரார்த்தனைகள் என கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday


வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ரஜினி மக்கள் மன்றத்தினர், அவர்களது ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர். ஆற்காடு நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், ஆற்காடு நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கலவை வரை செல்லும் தனியார் பேருந்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு பயணம் செய்யும் அனைவருக்கும் இலவச பயணத்தினை ஏற்பாடு செய்து தந்துள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday


வேலூர் மாநகர ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் வேலூர் கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தி, ரஜினி நலமுடன் வாழ வேண்டும்மென வேலூர் ஒருங்கிணைந்த மா.செ சோளிங்கர் ரவி, இணை செயலாளர் நீதி தலைமையில் தங்கத்தேர் இழுத்தனர். மேலும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர்.

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday

 

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday

 

அதோடு, சோளிங்கரில் உள்ள அருள்மிகு சோழபுரீஸ்வரர் ஆலயத்தில், லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அன்னதானம் வழங்கினார்கள் சோளிங்கர் ஒன்றிய மக்கள் மன்றத்தினர். குடியாத்தம் பகுதி மக்கள் மன்ற நிர்வாகிகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள மரக்கன்று வழங்குதல் என போன்றவற்றை செய்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பிறந்தநாளை கொண்டாடுவது என முடிவு செய்துள்ளனர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.