புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9வது குறுக்குதெருவைசேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ஜனனி. கடந்த ஆண்டு சமூகவலைதளத்தில்சென்னை விமான நிலைய நிறுவனத்துக்குகஸ்டமர்ஸ்சர்வீஸ்பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தார். அப்போது அந்த நிறுவன பெண்அனுசிங்மற்றும்பங்கஜ்ஆனந்த்,ஹேமாகோபால் ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம்செல்போனில்தொடர்பு கொண்டுசிறுகசிறுக ஜனனியிடமிருந்து 16,48,680ரூபாயைபெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி இதுகுறித்துசைபர்கிரைம்போலீசில் புகார் செய்தார். அதன் பேரில்போலீசார்வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டடெல்லியைசேர்ந்தலனன்குமாரைகைது செய்தனர்.
இதேபோன்றுஅன்லாஜெயின்என்பவரிடம் கனடாவிலிருந்துபோன்மூலம் தொடர்பு கொண்டு ரூ.41 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்தமணிப்பூரைசேர்ந்தரோனால்சிங்என்பவரையும், அதேபோன்றுசுைனனாநாரக்கிடம்கல்யாணம் செய்வதாகஆன்லைன்ஆப்மூலம் தொடர்பு கொண்டு பேசியகனடாவைசேர்ந்த மர்ம நபர், தான்டாக்டர்எனவும் சொந்தமாக மருத்துவமனைகட்டுவதற்குபணம் தேவைப்படுவதாகவும் கூறி அந்த பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்தார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் அந்த நபர்நைஜீரியாவைசேர்ந்த இமானுவேல் என்பது தெரியவந்தது. இந்த 3 மோசடி வழக்கிலும் தொடர்புடைய 3 பேரைசைபர்கிரைம்போலீசார்டெல்லி சென்று கைது செய்து நேற்று புதுச்சேரிக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.