Skip to main content

மாற்றுத்திறனாளிகள் திட்டங்களில் முறைகேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Abuse in the programs of the disabled! Request to take action !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், ஒட்டன்சத்திரம் வட்டார மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். 


இவர் தலைமையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் குழுக்களின் சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கடன்கள் பெற்று வந்துள்ளனர். இதற்கான மாதாந்திர கடன் தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர். இந்த சுய உதவிக்குழு பயிற்றுநராக மகுடீஸ்வரி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், குழுக்களின் மூலம் கட்டப்படும் கடன் தொகையை வரவு வைக்காமல் கட்டிய பணத்தை விட குறைந்த கணக்கை காட்டி ரசீது கொடுத்துள்ளார். 

 

இதனால் ஜனவரி 5ம் தேதி கார்த்திகேயன் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கடன் தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடித்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு முழுமையான ரசீது தராமல் உரிய பதில் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஒட்டன்சத்திரம் வட்டார மேலாளர் பிரியா என்பவரிடம் பல முறை புகார் செய்துள்ளார். ஆனால் இது குறித்து வட்டார மேலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் புகார் செய்ததால் இவர்களுக்கு  வரவேண்டிய எந்த ஒரு அரசும் நலத்திட்டங்களும் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை, வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர்  குழுக்களின் சார்பாக கொடுக்கப்படும் கடன் விண்ணப்பங்களை தர மதிப்பீடு செய்யாமல் நிராகரித்து கையூட்டு கேட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக இருக்கும் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்காமல் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களில் முறைகேடு செய்து வருவதாக கூறப்படுகிறது. 


ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் துவங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித செயல்பாட்டிலும் இல்லை. எனவே, இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.