Skip to main content

என்னது ரூ.10 லட்சம் செலவா? - ஷாக்கான விவசாயிகள்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

 fraud has taken place in the renovation of Kallanai Canal

 

கல்லணை கால்வாயில் உள்ள ஷட்டர்களை மராமத்து செய்ய ரூ.10 லட்சம் செலவு செய்ததாக வைத்துள்ள பதாகை சாலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக ஆற்றுக்குள் இறங்கி பார்க்கும் விதமாக வைத்திருப்பதை அந்த வழியாக போவோர் உற்றுப் பார்த்து கமெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

 

எந்த ஒரு அரசுப் பணி, மராமத்துப் பணியானாலும் பணியின் பெயர், நிதி ஒதுக்கீடு, பணி தொடங்கிய காலம், முடிவடைந்த காலம், ஒப்பந்தக்காரர் பெயர் முகவரி என அனைத்து தகவல்களுடன் பதாகை வைப்பது வழக்கம். அதே போல தான் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் செல்லும் கல்லணை கால்வாயில் பேராவூரணி வட்டம் ஏனாதிக்கரம்பை (மாயம் பெருமாள்கோயில் பிரிவு சாலை அருகே) தண்ணீர் திறக்கும் ஷட்டர் அருகே கல்லணை கோட்டம் நீர்வளத்துறை மறைத்து வைத்துள்ள பதாகை தான் அனைவரையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

 

 fraud has taken place in the renovation of Kallanai Canal

 

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரின் பரிந்துரையில் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி ‘ரூ.10 லட்சத்தில் பேராவூரணி வட்டம், ஏனாதிக்கரம்பை கிராமத்தில் உள்ள கழனிவாசல் நீர்த்தேக்கத்தில் புதிய ஷட்டர்கள் அமைப்புகள் பொறுத்தும் பணி’ ஒப்பந்தக்காரர் எஸ்.ஆர். பேப்ரிக்கேசன்ஸ் புதுக்கோட்டை என அந்த பதாகையில் அச்சிடப்பட்டு சில தகவல்கள் மறைக்கப்பட்ட பதாகை சாலையில் போவோர் பார்த்து விடாமல் ஆற்றுப் பக்கமாக திருப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த பதாகை ஏன் இப்படி மறைத்து வைத்துள்ளனர். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்று கூறும் விவசாயிகள், நல்லா இருந்த ஷட்டர்களை சில இடங்களில் ஒரு மூட்டை சிமென்ட் கொண்டு வந்து லேசான விரிசலை பூசுனாங்க. ஒரு சட்டர் திருகு இரும்பையும் காணும். சிமென்ட் பூசிய இடத்தில் சுண்ணாம்பு கூட பூசவில்லை. புதுசா ஷட்டர் அமைக்கும் பணி என்று பதாகையில் உள்ளது. இந்த பணிக்கு ரூ.10 லட்சம் செலவா? என்று வாய் பிளக்கின்றனர். மேலும் சீக்கிரமே பதாகை காணாமல் போனாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கின்றனர். கல்லணை கால்வாய் பணிகள் ஒதுக்கப்பட்ட பணிகள், ஒதுக்கிய நிதியில் சரியாக நடந்துள்ளதா அல்லது பெயர்ப்பலகை அளவில் மட்டும் நடந்துள்ளதா என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் தான் சொல்ல வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் டிஜிபி மீதான பாலியல் வழக்கு; நாளை தீர்ப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
case against former DGP; Judgment tomorrow

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க இருக்கிறார்.

Next Story

முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Case registered against former DGP

 

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

அந்த புகாரில் 'இந்துகள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய் செய்தியை நடராஜன் வாட்ஸப் அப் குழுக்களில் பரப்பியதாகவும், முதல்வர் கூறாத ஒன்றை கூறியதாக அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை என கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.