Skip to main content

அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரைச் சொல்லி மோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சியினர் கோரிக்கை

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Fraud by using the name of Minister I. Periyasamy! The party's request to take action!

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் தக்க வைத்ததின் மூலம் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை திமுக அதிக பெரும்பான்மையுடன் கைப்பற்றி திண்டுக்கல் மாநகரை திமுக வசமாக்கினார் அமைச்சர் ஐ.பெரியசாமி. மேலும், திண்டுக்கல் மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் செய்துவருகிறார். 

 

இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரைச் சொல்லி திமுக நிர்வாகிகள் சிலர் அப்பாவி மக்களுக்கு வீட்டுமனை வாங்கி கொடுப்பதாக கூறி பண வசூலில் இறங்கி இருப்பதாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் திண்டுக்கல் மாநகரப் பகுதியில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டி, கோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் சிலர் அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டு மனை வழங்க உள்ளதாக தெரிவித்து வசூல் செய்துவருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி காவலர் குடியிருப்பு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 600 நபர்களுக்கு 3 சென்ட் அளவுக்கு வீட்டு மனை தருவதாக கூறியுள்ளனர். மேலும், இதற்கு கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ரூ 2,000, ஆதார் கார்டு இரண்டு போட்டோ உள்ளிட்டவற்றை பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி மீதம் 50 ஆயிரம் ரூபாய் பின்னர் தர வேண்டும் என்று கூறி வசூலில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பில் உள்ள கட்சியினர் சிலரிடம் கேட்ட போது, ‘திண்டுக்கல் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பே எங்க அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்துள்ளார். ஆனால், தற்பொழுது பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதாக அமைச்சர் எதுவும் சொல்லவில்லை. அமைச்சருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படி அமைச்சர் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபட்டுவருபவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.