Skip to main content

ஏற்கனவே திருமணமான பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து மோசடி!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

Fraud by keeping an already married woman married to someone else

 

நாமக்கல் அருகே ஏற்கனவே திருமணமான பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. 

 

நாமக்கல் மாவட்டம், கடந்தப்பட்டியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஜனகராஜ் என்பவர் தனக்கு திருமணத்திற்காக பெண் தேடுமாறு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்ற தரகரிடம் கேட்டார். இதற்காக ரூபாய் 1 லட்சம் கமிஷன் வாங்கிக் கொண்ட ராம்குமார், ராஜா என்ற மற்றொரு தரகரின் உதவியுடன் கோவில்பட்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணை கடந்த திங்கள்கிழமை அன்று மணம் முடித்து வைத்தார். 

 

திருமணத்தைப் பதிவு செய்ய கௌரியிடம் ரேஷன் கார்டை கேட்டு, அதனை வாங்கிப் பார்த்த போது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது ஜனகராஜுக்கு தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த ஜனகராஜ், இது குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இதையடுத்து, கௌரி, இடைத்தரகர்கள் ராஜா மற்றும் ராம்குமார் உள்ளிட்டோரிடம் புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.