Skip to main content

வீடுகட்டி தருவதாக மோசடி... போலீசார் வழக்குப்பதிவு!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

Fraud to build a house ... Police file a case!

 

கடலூர் மாநகராட்சியில் உள்ள கே.டி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாற்பது வயது அனிதா. இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் கடற்கரை சாலையை ஒட்டி உள்ள கூனிமேடுபகுதியில், ஒரு வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்ட தீர்மானித்தார். அதன்படி கூனிமேடுபகுதியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்கு முன்பதிவு செய்தார். அதற்கு முன் பணமாக 2018 ஆம் ஆண்டு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒருதேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 52 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தார். அந்த வங்கியும் அனிதா அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அவருக்கு 2019 ஆம் ஆண்டில் 52 லட்ச ரூபாய் கடன் தருவதற்கு ஒப்புதல் அளித்து அதில் முதல் தவணையாக 42 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளது.

 

அனிதா அந்த 42 லட்ச ரூபாய் பணத்தையும் வீட்டுமனை கொடுத்து அதில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்தம் செய்து கொடுத்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த  46 வயது ஜெயச்சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். வீட்டுமனை உட்பட அதில் வீடுகட்டி முடித்து அனிதாவிடம் ஒப்படைப்பதற்கு  ஜெயச்சந்திரன் மேலும் 12 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். வங்கியிலிருந்து அடுத்து வரவேண்டும் தவணை பணம் வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. வேறு வகையில் தனது உறவினர்கள் மூலம் 12 லட்சம் பணத்தை திரட்டி ஜெயச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். பணம் முழுவதையும் பெற்றுக்கொண்ட ஜெயச்சந்திரன் அனிதாவிற்கு வீடு கட்டித் தருவதாக கூறிய அந்த இடத்தில் தனது உறவினர் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்து அனிதாவை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். தற்போது இதுகுறித்து தகவல் தெரியவந்ததையடுத்து அனிதா விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஜெயச்சந்திரன் தன்னிடம் பண மோசடி செய்தது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஜெயச்சந்திரன் மோசடி செய்தது உறுதி என்பது தெரிய வந்துள்ளதையடுத்து  மோசடி நபர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.