Skip to main content

பிளஸ்-2 மாணவியைத் தொந்தரவு செய்து தற்கொலைக்குத் தூண்டிய நான்கு வாலிபர்கள்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Four teenagers responsible for 12th student wrong decision

 

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம். இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் பூஜா என்பவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 22 )என்ற வாலிபர் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அதற்கு பூஜாவை தூது செல்லுமாறு பூஜாவின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். இதை பார்த்த பூஜா வேல்முருகன் கோரிக்கையை நிராகரித்ததோடு இது தொடர்பாக தனது தந்தையிடம் வேல்முருகன் எஸ்எம்எஸ் அனுப்பியது குறித்து  கூறியுள்ளார். பூஜாவின் தந்தை இதை தட்டிக்கேட்ட காரணத்தினால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனின் உறவினர்கள் வேலாயுதம் வீட்டிற்கே சென்று அவரையும் அவரது மகள் பூஜாவையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் தந்தைக்கும் மகளுக்கும் காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் பூஜா காவல் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்பி, மத்திய மண்டல ஐஜி ஆகியோருக்கு தனக்கும் தனது தந்தைக்கும் ஏற்பட்ட நிலை குறித்து புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த தகவல் அறிந்த வேல்முருகன் தனது நண்பர்கள் சிலருக்கு பூஜாவின் செல்போன் எண்ணை கொடுத்து அவர்கள் மூலம் மேலும் மேலும் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூஜா நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். இதையறிந்த அவரது தந்தை பூஜாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காததால் பூஜா உயிரிழக்க காரணம் எனவே வேல்முருகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூஜாவின் உடலை வாங்க மறுத்து அரியலூர் அரசு மருத்துவமனை அருகில் பூஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு பூஜாவின் உடலை பெற்றுச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகனின் நண்பர்கள் மூவரை கைது செய்துள்ளனர். வேல்முருகன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.