திருச்சி - 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் 4 காவலர்களுக்கு தொற்று!

Four police who infected by corona

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் வேகமாக பாதிக்கப்படக் கூடியவர்களில் காவல்துறையினரும் அடங்குவார்கள். நேற்று முன்தினம் ரயில்வே காவலர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கும், லால்குடியில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கும் , கோட்டை காவல் உதவி ஆணையர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேரும் 2 தவணை தடுப்பூசிசெலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

police trichy vaccination
இதையும் படியுங்கள்
Subscribe