Skip to main content

கடலூரில் மூன்று பேர் தொடர் மாயம்... போலீசார் விசாரணை!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Four people in a series of hiding in Cuddalore ... Police investigation!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ளது ஆலடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது ராஜி. இவருடைய மனைவி அம்பிகா வயது 35. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு முதல் அம்பிகாவை காணவில்லை. அவரது கணவர் ராஜி மற்றும் உறவினர்கள் உட்பட பலரும் பல்வேறு இடங்களில் தேடியும் அம்பிகா பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவர் ராஜி கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ராஜி மனைவி அம்பிகா மாயமான தகவல் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திட்டக்குடி அருகில் உள்ள மேல ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 48 வயது பழனிவேல். கடந்த 12ஆம் தேதி முதல் வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுமதி வயது 40 ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதேபோன்று விருத்தாசலம் அடுத்துள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் 21 வயது இன்பமதி. இவர் விருத்தாசலத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி முதல் இன்பமதியை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் அவரது பெரியம்மா அனைவரும் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் இன்பமதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இன்பமதியை விருத்தாசலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

தங்களின் குடும்ப சூழ்நிலை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாத கவலை மனதில் குழப்பம் இப்படிப் பல்வேறு மன குழப்பம் காரணமாக தலைமறைவாகி விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி மூன்று சம்பவங்களும் வெவ்வேறு ஊர்களில் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.