Skip to main content

சமூக மோதலை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது! கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

பொன்பரப்பி கலவரத்தை தொடர்ந்து சமூக மோதலை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

 

ARRESTED


இதனால் இருதரப்பு மக்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வீ.அன்புச்செல்வனும்,  காவல் கண்காணிப்பாளர் சரவணனும் சமூக அமைதியை குலைக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  
 

அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணமாக வாட்ஸ் அப் மூலம் செய்திகள் / வீடியோக்கள் ஆகியவற்றை பரப்பி மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயன்று வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுவார்கள் என்றும், கடலூர் மாவட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதி செய்துகொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக  காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 
 

இந்நிலையில் மோதலை தூண்டும் விதமாக பேசி வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விருத்தாசலத்தை சேர்ந்த சிறுத்தை சிவக்குமார் (38) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேலும்  தொண்டமாநத்தத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (71), காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த அருள்ராஜ் (28), குண்டியமல்லூர் கிராமத்தை சேர்ந்த சவுரிராஜன் (25) ஆகியோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் எச்சரிக்கை செய்தும் எச்சரிக்கையை மீறி இதுபோன்ற வீடியோக்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து மூன்று பேரை அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஜாபர் சாதிக் கைது'- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
 'Jaber Sadiq Arrested'-Narcotics Unit in action

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.  

தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு இந்த கைது தொடர்பாக இன்று பிற்பகல் விளக்கமளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

கோவில் படையல் மதுவில் விஷம்; பூசாரி கைது

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Poison in Temple Guard Wine; Priest arrested

கோவிலில் சாமிக்கு படையலில் வைக்கப்பட்ட மதுவை குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கோயில் பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில் வடலிவிளை பகுதிகளில் அமைந்துள்ளது ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில். இந்த கோவிலில், கோவில் கணக்கு தொடர்பாக நிர்வாகிகளுக்கும், அருள் என்ற நபருக்கும் இடையே மோதல்போக்கு இருந்தது வந்துள்ளது. கோவில் கணக்கை அவ்வப்போது கேட்டு அருள் என்பவர் கோவில் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி சுடலைமாட சாமி கோவிலில் வைக்கப்பட்ட படையலில், மது வைக்கப்பட்டது. அந்த மது தனக்கு தான் வேண்டும் என அருள் பிரச்சனை செய்துள்ளார். அப்பொழுது கோவில் பூசாரி சதீஷ் ஏற்கெனவே அவர்களுக்குள் இருக்கும் முன் விரோதத்தை மனதில் வைத்து படையல் மதுவில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். ஆனால், அதை அருள் குடிப்பதற்கு முன்பாக செல்வகுமார் என்பவர் தெரியாமல் குடித்துள்ளார். இதில் செல்வகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

செல்வகுமாரின் உயிரிழப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பூசாரி சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.