Skip to main content

போதைப்பொருள் விற்பனை; நான்கு பேர் கைது

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Four people arrested for Narcotics possession in Chennai

 

சென்னையில் போதை பவுடர், கஞ்சா ஆகியவை விற்பனை செய்வதையும் வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

 

அதன் பேரில் வடசென்னை பகுதியில் போதை பவுடர் பதுக்கி விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் ஆய்வாளர் ரவி மற்றும் தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை கெனால் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பைக்கில் வந்த ஐந்து பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அதில் நான்கு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

 

பிடிபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த டார்வின் வின்சென்ட்(40), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வாசிம் ராஜா(31), தண்டையார்பேட்டை தமிழக நகரை சேர்ந்த சௌபர் சாதிக்(32), தண்டையார்பேட்டை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வேணுகோபால்(46) என தெரியவந்தது. மேலும், இவர்கள் மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பவுடரை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்தனர். 

 

இதையடுத்து இவர்களிடமிருந்து ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 317 கிராம் மெத்தாம்பேட்டமைன் போதை பவுடர், 12 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு இருசக்கர வாகனம், 5 செல்போன், ஒரு எடை மெஷின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் போதை பவுடரை கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலதிபர்களின் கேளிக்கை விடுதிகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பித்து சென்ற முக்கியக் குற்றவாளியையும் போலீசார் தீவிரமாக் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.