Skip to main content

கோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

கோவை மாநகரில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்ட1460 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்  வடமாநிலத்தவர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.

 

Four people arrested for kutka bundles ...

 

கோவை மாநகரில் சராசரியாக தினமும் 10 இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை குறைந்த அளவில் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யும் நபர்களை பிடிக்க எண்ணிய போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், நான்கு வட மாநிலத்தவர்கள் குட்கா பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்வதாகவும்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

Four people arrested for kutka bundles ...


இதனையடுத்து இன்று  அந்த வீட்டுக்கு சென்ற போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட  குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த வட மாநிலத்தவர்கள் வாகாராம், ஓம்பிரகாஷ், பரத் பட்டேல், ஹம்ரா ராம் ஆகிய 4 பேர் கைது செய்த போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த  1460 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் நான்கு பேரும் பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து கோவையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்ததும்,அவர்கள் மீது ஏற்கனவே பல குட்கா வழக்குகள் நிலுவையில் இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.