Published on 04/05/2021 | Edited on 04/05/2021

தமிழகத்தில் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மற்றொருபுறம் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு தங்களுடைய குடும்பங்களோடு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகராக இருந்து வருகிறது.
அதன்படி இன்று ஒரே நாளில் திருச்சியில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3438 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் திருச்சியில் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 464 பேர் குணமடைந்து மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். மீதமுள்ள 3,410 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4 பேர் பலியாகியுள்ளனர்.