Skip to main content

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே கார் விவபத்து 4 பேர் பலி, 4 பேர் படுகாயம்!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

 

cc

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஐ.டி ஊழியர் நவீன் சாமுவேல், பூபதி உள்ளிட்டோர் சென்னை நோக்கி  காரில் சென்று கொண்டிருந்தனர்.  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராம பகுதியில்  சென்றபோது காரின் டயர் வெடித்ததால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவிலுள்ள தடுப்பில் மோதி எதிரே திருவண்ணாமலையிலிருந்து பரமக்குடிக்கு சென்றகொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் சாலையோரத்தில் விழுந்தன. 
 

இதில்  சென்னை நோக்கி சென்ற காரில் இருந்த நவீன் சாமுவேல், பூபதி  உள்ளிட்ட 4  பேர்  காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

அதேபோல் பரமக்குடி நோக்கி சென்ற மற்றொரு காரில்  பயணம் செய்த சரவணபெருமாள், சுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன்,  ராஜபதி ஆகிய 4 பெரும் படுகாயம் அடைந்தனர்.  இவர்களில் பாலகிருஷ்ணன்,  ராஜபதி ஆகியோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும்,  சரவணப்பெருமாள்,  சுந்தரராஜன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

 

இறந்தவர்களின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திட்டக்குடி டிஎஸ்பி தங்கவேலு, விபத்தை ஆய்வு செய்தார். இந்த கோர விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மீது வழக்கு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
ethir neechal actress madhumitha car accident issue

தனியார் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக இருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்த போது காரை மதுமிதா ஓட்டி வந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்துள்ளது.

அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்துள்ளார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்துள்ளார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்துள்ளனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்துள்ளனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர்.

Next Story

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ கார் விபத்தில் பலி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Telangana woman MLA passed away in a car accident

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லாஸ்யா நந்திதா (37). முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செகந்திரபாத் கண்டோன்மெண்ட் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், இன்று (23-02-24) அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செரு சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் உள்ள இருந்த லாஸ்யா நந்திதா படுகாயமடைந்தார். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நந்திதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நந்திதா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கார் ஓட்டுநர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நந்திதா காரில் சென்று கொண்டிருந்த போது  நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில்  ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கினார். அவரது தலையில் காயம் ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 10 நாட்களில் இரண்டாவது விபத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சயன்னா, ஓராண்டுக்கு முன்பு இறந்ததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.