Skip to main content

“வீடியோ இருக்கு...கட்டாய கல்யாணம் பண்ணி வைப்போம்...” - மிரட்டிய மகனின் தந்தை; விஷம் குடித்த சிறுமி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

four arrested under pocso include son and father

 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன்(21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமியை அவரது வீட்டுக்குத் தெரியாமல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மணிகண்டன் கடத்திச் சென்று வெளியூரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். சிறுமியைக் காணாத அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த கைகளத்தூர் போலீசார் கடந்த மாதம் 3ம் தேதி சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

 

இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மணிகண்டனின் தந்தை ராமசாமி, அவரது உறவினர்கள் மாரிமுத்து உட்பட நால்வர் சிறுமியிடம் சென்று வீடியோ இருப்பதைத் தெரிவித்து, அவரைக் கடத்திச் சென்று தன் மகன் மணிகண்டனுக்குக் கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று மிரட்டி உள்ளனர். மேலும் சிறுமியிடம் அநாகரிகமாகப் பேசி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமி விஷம் குடித்த தகவல் அறிந்த அவரது பெற்றோர், சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். 

 

சிறுமி மருத்துவமனையில் இருந்தபோது, அவரிடம் சேலம் மாவட்ட குற்றவியல் நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். அந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைகளத்தூர் இன்ஸ்பெக்டர் நடராஜன், சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான மணிகண்டன், அவரது தந்தை ராமசாமி, தாய் ராணி அவர்களது உறவினர் மாரிமுத்து ஆகிய நால்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அனைவரையும்  கைது செய்து நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.