Skip to main content

பத்து லட்சம் கேட்டு உறவினரிடம் கடத்தல் நாடகமாடிய இளைஞர் உட்பட நால்வர் கைது!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Four arrested for kidnapping a relative for Rs 10 lakh

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர் அமித். இவர் தனது சொந்த மாமாவான அசேனின் வெங்காய மண்டியில் பணியாளராகவும், முக்கிய நபராகவும் பணிபுரிந்து வந்தார். அசேனுக்கு  திடீரென நவம்பர் 5ஆம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அசேனிடம் பேசியவர்கள், அமிதை கடத்தி வைத்துள்ளதாகவும் ரூ.10 லட்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் அமித்தை கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

அதைக்கேட்டு அதிர்ச்சியான அசேன், உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையம் சென்று கடத்தல் புகார் கொடுத்தார். இந்தத் தகவல் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய புலன் விசாரணையில், இரண்டு மணி நேரத்தில் கடத்தல் நாடகமாடி, உள்ளூரிலேயே இருந்த கும்பலை செல்போன் டவர் மூலமாக மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஜாலியாக இருக்கப் பணம் தேவைப்பட்டதால் பணத்துக்காகக் கடத்தல் நாடகம் ஆடியதாகக் கூறியுள்ளனர். இதற்கு அமித் தனது நண்பர்களை பயன்படுத்தியதை விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அமித் உட்பட 5 நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் ஆம்பூர் போலீஸார். கைதான 5 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.