Skip to main content

தூத்துக்குடியில் தடுத்து நிறுத்தப்பட்ட மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர்... சிக்கிய டூப்ளிகேட் பாஸ்போர்ட்..?!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

சொந்த நாட்டிலிருந்து தப்பி சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் தூத்துக்குடியில் தடுத்து நிறுத்தப்பட்டு , மத்திய, மாநில உளவு அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

tutucorin

 

பார்ஜியா வகையிலான சிறு கப்பலான விர்கோ 9 கருங்கற்களை ஏற்றிக்கொண்டு தமிழர் ஒருவர் உட்பட இந்தோனோஷிய நாட்டினரை சேர்த்து மொத்தம் 9 பேருடன்  தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவிற்கு புறப்பட்ட கப்பல், அங்கே கருங்கற்களை இறக்கி வைத்துவிட்டு திரும்ப வருகையில் கப்பலிலில் கூடுதலாக 1 நபர் சேர்த்து 10 நபர்களாக வருவதாக தகவல் கிடைக்க, நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டது அக்கப்பல். அந்த கப்பலில் சட்டவிரோதமாக பயணித்தது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் என்ற தகவல் வெளியாக அனைத்து உளவு அமைப்புக்களும், குடியுரிமை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். தற்பொழுது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அக்கப்பலில் சட்டவிரோதமாக பயணித்த முன்னாள் துணை அதிபரை விசாரிக்க வெளிநாட்டினர் வருகைப்பதிவின் அதிகாரியான சேவியர் தன்ராஜ் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

tutucorin

 

Former Vice Chancellor of Maldives detained in tutucorin...Trapped Duplicate Passport ..?!

 

இந்நிலையில், மாலத்தீவின் முன்னாள் அதிபரான அகமது அதீப் காபரின் பாஸ்போர்ட் "நக்கீரனுக்கு" பிரத்யேகமாய் கிடைத்துள்ளது. துணை அதிபரின் பாஸ்போர்ட் மாலத்தீவு அரசால் தற்பொழுது முடக்கப்பட்ட சூழலில் இந்த டூப்ளிகேட் பாஸ்போர்ட் இவருக்கு கிடைத்தது எப்படி..? தூத்துக்குடிக்கு வந்த இவர் இங்கிருந்து எங்கு செல்ல உள்ளார்.? இவருக்கு இங்கு உதவுவது யார்..? என்ற பல கேள்விகளுடன் உளவு அமைப்புக்கள் வட்டமிட்டு வருகின்றது.

 

tutucorin

 

இதே வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை, வாலி நோக்கம், கீழக்கரை, பெரியப்பட்டிணம் மற்றும் மரைக்காயர் பட்டிணம் உள்ளிட்டப் பகுதிகளில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பிற்கு பின் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதால் சர்வதேச அளவில் கவனம் பெறுகின்றது இந்த ஊடுருவல். இதனால் தமிழக கடற்கரையோரப்பகுதிகளில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.