சென்னை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், யஷ்வந்த் சின்ஹா மற்றும் கமல்ஹாசனின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தேசிய மற்றும் மாநில அரசியல் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.