Skip to main content

மக்களுக்காக பேசுவதை, எழுதுவதை, போராடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்- ப.சிதம்பரம்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

"எனக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும் மக்களுக்காக பேசுவதை, எழுதுவதை, போராடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்." என பத்திரிகையாளர் மத்தியில் சூளுரைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம்.
 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, "வழக்குப் பற்றி வாய் திறக்கக்கூடாது.!" என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுப்பட்டவுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று (08.12.2019) வருகை புரிந்தார்.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH


காரைக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர்., "இன்று நடப்பது தர்ம யுத்தம்.! ஏழு மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற அரசு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்று இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. நாள்தோறும் சமூக அநீதி, வன்கொடுமை கற்பழிப்பு கொள்ளை இவை அதிகரித்து வருவது தான் வளர்ச்சியாக வைத்திருக்கின்றது அந்த அரசு.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த அரசு என்ன சொல்கிறதோ, அதனையே அனைவரும் செய்ய வேண்டும். அதனை யாராவது எதிர்த்து குரல் கொடுத்தாலோ, சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்துகள் பதிவு செய்தாலோ அவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்படுவார்கள். ஆதலால் எல்லா வகையிலும் வாழ்வதற்கே அச்சமாக உள்ளனர். இது பெரிய தொழில் அதிபர்கள், சாதாரண தொழில் செய்பவர்கள் வரை அச்சம் உள்ளது. அவர்கள் விரும்புவதை தான் சாப்பிடுவதை தான் சாப்பிட வேண்டும்.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH

அவர்கள் பேசும் மொழி தான் தேசத்தில் பேச வேண்டும். இப்படி சர்வாதிகார பார்வையில் தான் நாடு செல்வதால் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதனை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்? மக்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எதிர்த்து பேசுவேன்! எழுதுவேன்! போராடுவேன்." என்றவரர் தொடர்ந்து., "அதிகார மையங்கள் துணிவோடு தங்களது கருத்தை சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசு நெறிப்படும். இன்று நாடு போகும் பாதை தவறான பாதை, மாற்றுப் பாதையில் போக வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வருவார்கள்.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH


வெங்காயம் சாப்பிடுவார்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள் அல்ல. உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு இன்று மாலையில் அறிவிப்பு வெளியாகும்." என்றார் அவர். இதற்கு முன்னதாக சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த ப.சிதம்பரத்தை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.