Skip to main content

மக்களுக்காக பேசுவதை, எழுதுவதை, போராடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்- ப.சிதம்பரம்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

"எனக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும் மக்களுக்காக பேசுவதை, எழுதுவதை, போராடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்." என பத்திரிகையாளர் மத்தியில் சூளுரைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம்.
 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, "வழக்குப் பற்றி வாய் திறக்கக்கூடாது.!" என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுப்பட்டவுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று (08.12.2019) வருகை புரிந்தார்.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH


காரைக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர்., "இன்று நடப்பது தர்ம யுத்தம்.! ஏழு மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற அரசு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்று இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. நாள்தோறும் சமூக அநீதி, வன்கொடுமை கற்பழிப்பு கொள்ளை இவை அதிகரித்து வருவது தான் வளர்ச்சியாக வைத்திருக்கின்றது அந்த அரசு.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த அரசு என்ன சொல்கிறதோ, அதனையே அனைவரும் செய்ய வேண்டும். அதனை யாராவது எதிர்த்து குரல் கொடுத்தாலோ, சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்துகள் பதிவு செய்தாலோ அவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்படுவார்கள். ஆதலால் எல்லா வகையிலும் வாழ்வதற்கே அச்சமாக உள்ளனர். இது பெரிய தொழில் அதிபர்கள், சாதாரண தொழில் செய்பவர்கள் வரை அச்சம் உள்ளது. அவர்கள் விரும்புவதை தான் சாப்பிடுவதை தான் சாப்பிட வேண்டும்.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH

அவர்கள் பேசும் மொழி தான் தேசத்தில் பேச வேண்டும். இப்படி சர்வாதிகார பார்வையில் தான் நாடு செல்வதால் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதனை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்? மக்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எதிர்த்து பேசுவேன்! எழுதுவேன்! போராடுவேன்." என்றவரர் தொடர்ந்து., "அதிகார மையங்கள் துணிவோடு தங்களது கருத்தை சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசு நெறிப்படும். இன்று நாடு போகும் பாதை தவறான பாதை, மாற்றுப் பாதையில் போக வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வருவார்கள்.

FORMER UNION MINISTER P CHIDAMBARAM SIVAGANGAI DISTRICT KARAIKUDI SPEECH


வெங்காயம் சாப்பிடுவார்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள் அல்ல. உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு இன்று மாலையில் அறிவிப்பு வெளியாகும்." என்றார் அவர். இதற்கு முன்னதாக சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த ப.சிதம்பரத்தை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.