Skip to main content

அடுத்த சந்திப்பு எப்போதோ? - 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Former students Government College reunited with their families after 25 years

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில், 1994 முதல் 1997 வரை பயின்ற விலங்கியல் துறை மாணவர்கள், தாங்கள் படித்த கல்லூரியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பசுமை நிறைந்த நினைவுகளுடன் சங்கமித்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

 

40க்கும் மேற்பட்ட முன்னாள்  மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றிணைந்து, கல்வி பயிற்றுவித்த  பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் மரியாதை செலுத்தினார்கள். கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விலங்கியல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடேசன், முன்னாள் பேராசிரியர்கள் கதிர்வேல் தற்போதைய விலங்கியல் துறைத் தலைவர் செந்தில்குமார், பேராசிரியர்கள் சண்முகம், முத்தழகி, பவானி, கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், நிர்வாகிகள் ரெங்கப்பிள்ளை, செல்லத்துரை, புலேந்திரன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

 

Former students Government College reunited with their families after 25 years

 

இந்த நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்களும் தாம் பயின்ற காலங்களில் நடந்தவை பற்றியும், பேராசிரியர்கள் பற்றியும்,  கல்லூரி கால நிகழ்வுகள் பற்றியும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், தற்போதைய பணிகள், குடும்ப வாழ்வு குறித்தும்  கலந்துரையாடினர். பின்னர் பேராசிரியர்களுடன் தன் படம், குழு படம் எடுத்துக் கொண்டனர். மேலும் துணைவர், துணைவி, பிள்ளைகள் என குடும்பம் குடும்பம் என குழு குழுவாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்ந்தனர். 

 

இந்நிகழ்வுகளை விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள்  வேப்பூர் ரவிக்குமார், விருத்தாசலம் வேல்முருகன், சுலைமான், முதுகுளம் சுரேஷ், பாண்டியன், சிங்கப்பூர் சித்ரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தெய்வாணை, கீதா, அனிதா, மங்கையர்க்கரசி, இளையராஜா, செந்தில் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இறுதியில் அடுத்த சந்திப்பு எப்போதோ...? என ஆனந்த கண்ணீருடன் பிரியா விடை பெற்ற காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.