ADVERTISEMENT
அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள ஆவுடையப்பனுக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments