Skip to main content

உளுந்து விலை குறைவு! வேளாண் விற்பனை கூடத்தினை இழுத்து மூடி விவசாயிகள் சாலை மறியல்!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உளுந்து பயிர் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதனால் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு உளுந்து வரத்து அதிகமாக உள்ளது.  

 

protest

 

இந்நிலையில் ஒரு மூட்டை உளுந்தின் விலை ரூபாய் 4900 முதல் 5000 வரை என்று நிர்வாகம் விலை நிர்ணயத்துள்ளது.  இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நேற்றைய தினத்தை விட 400 ரூபாய் குறைந்தற்கான காரணத்தை கேட்ட போது  அதிகாரிகள் எவ்வித பதிலும் சொல்லவில்லை. அதையடுத்து  100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட அதிகாரிகள், இன்றைய விலை இவ்வளவு தான் என்றும், இந்த விலை கட்டுப்படியாக ஆகவில்லை என்றால் மூட்டைகளை எடுத்து செல்லுங்கள் என்று  அலட்சியமாக கூறியதால் விவசாயிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். 

 

protest

 

மேலும் ஒரு சாக்கிற்கு 10 ரூபாயும், எடை போடுவதற்கு 10 ரூபாயும் கொள்ளையடிப்பதாகவும்,  வெளியூர் வியாபாரிகளை கொள்முதல் செய்ய விடாமல், கமிஷன் தொகைக்காக உள்ளூர் வியாபாரிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் அனுமதிப்பதால் விவசாயிகள் அனைத்து வகையிலும்  நஷ்டம் அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். 

 

protest

 

பின்னர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைகளுக்கு உடன்படாத விவசாயிகள்  ஒழுங்கு முறை விற்பனை கூட நிலையத்தின் கதவுகளை இழுத்து மூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. பின்னர் காவல் துறையினர் சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர். இதேபோல் நெல் மூட்டை விலை குறைப்பால் விவசாயிகள் கடந்த வாரம் சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .