முன்னாள் எம்.பி., எஸ்.சிவசுப்பிரமணியம் நினைவு நாள்.. மரியாதை செய்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்! 

திமுக பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூரில் உள்ள எஸ்.எஸ். படிப்பக வளாகத்தில் எஸ்.சிவசுப்பிரமணியனின் உருவப்படத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

ss sivasankar
இதையும் படியுங்கள்
Subscribe