Skip to main content

சுங்கச்சாவடியில் தகராறு செய்த விவகாரம்... முன்னாள் எம்.பி.க்கு நூதன தண்டனையுடன் முன்ஜாமின்... நீதிமன்றம் உத்தரவு! 

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

FORMER MP POLICE SALEM COURT

 

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (77). முன்னாள் எம்.பி.,யான இவர் திமுக, அதிமுக, தேமுதிக என சில கட்சிகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அதிமுகவில் தஞ்சம் அடைந்தார். எனினும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார்.

 

இந்நிலையில், கடந்த ஜூன் 28- ஆம் தேதி, மேச்சேரி அருகே உள்ள தனது தோட்டத்திற்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஓமலூர் சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரிடம் வாகன ஆவணங்களைக் கேட்டனர். அதற்கு அவர் தான் ஒரு முன்னாள் எம்.பி., என்று கூற, அதற்கான அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜூனன் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், இரும்பாலை காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ ரமேஷ் என்பவரை செருப்பு காலால் எட்டி உதைத்தார்.

 

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து, அர்ஜூனன் மீது ஆபாசமாக பேசுதல், பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பதிலுக்கு அவரும் காவல்துறையினர் மீது சேலம் மாநகர ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். 

 

இதற்கிடையே, முன் ஜாமின் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அர்ஜூனன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு ஜூலை 6- இல் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, முதல்வர் நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி, அர்ஜூனனுக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.