Skip to main content

வீரமணி வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர்... செய்தியாளர்களை தாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

jk

 


முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு மற்றும் அவருடன் சம்மந்தப்பட்ட உறவினர்கள், பினாமிகள் என 28 இடங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுக்குறித்த செய்திகள் வெளிவந்ததும் அதிமுகவில் உள்ள வீரமணியின் ஆதரவாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர். போலிஸார் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், முன்னாள் அமைச்சரான வீரமணி வீட்டுக்குள் உள்ளே உள்ளார் அவரை பார்க்கவேண்டும் எனச் சட்டம் பேசினர். காவல்துறை அதனை கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில் வாணியம்பாடி தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ சம்பத்குமார் தலைமையில் அதிமுகவினர் காவல்துறைக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


இதனையெல்லாம் செய்தியாகப் பதிவு செய்து கொண்டுயிருந்த தினகரன் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கணேஷ்குமார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். காவல்துறை தலையிட்டு செய்தியாளரின் உயிரைக் காப்பாற்றியது. முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் நாக்கை கடித்து செய்தியாளரை மிரட்டினார். சன் டிவியின் சேலம் மண்டல செய்தியாளர் குமரேசன் மீதும் தாக்குதல் நடத்தினர். இது அங்கிருந்த மற்ற செய்தியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மற்ற செய்தியாளர்களையும் மிரட்டினர் அதிமுக நிர்வாகிகள்.


இது குறித்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் செய்தியாளர்கள் ஜோலார்பேட்டை காவல்நிலையத்துக்குச் சென்று அதிமுகவினர் மீதும், முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் மீது புகார் தந்தனர். அந்த புகாரை வாங்கி வைத்துக்கொண்ட போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்தனர். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.