Skip to main content

அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து வெற்றிபெற்ற தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.பி.வெங்கிடு கரோனாவால் மறைவு!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

GP Venkat

 

திராவிட இயக்கம் தமிழகம் முழுக்க வேர் பரப்பியபோது அதில் தீவிர தொண்டராகப் பணியாற்றி பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி என எல்லோராலும் பாராட்டப் பெற்றவர், பெரியாரின் பெருந்தொண்டர் என்ற பெயரோடு பயணித்தவர் மொழிப்போர் தியாகி கோபி வெங்கிடு. உடல் நலிவடைந்தபோது, அவருக்கு கரோனா உறுதி படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று 23.09.2020 மாலை 4 மணிக்கு மருத்துவமனையிலேயே காலமானார். அவருக்கு வயது 83.


தி.மு.க.வில் கொள்கைப் பற்றாளராக வாழ்ந்த ஜி.பி.வெங்கிடு தலைமை பேச்சாளராகவும் இருந்தார். தி.மு.க.வில் உள்ள முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள் எல்லோராலும் அறியப்பட்டவர். 1992 இல் ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சி. நமது 'நக்கீரன்' இதழ்மீது பல அடக்கு முறைகளை ஏவியது ஜெ' அரசு. அப்போது அமைச்சராகவும் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்த செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அவரது ஆட்கள் கோபிசெட்டிபாளையத்தில் நக்கீரன் இதழ் எந்தக் கடைகளிலும் விற்கக்கூடாது எனக் கடைகாரர்களை மிரட்டி இதழ்களைப் பறித்து தீ வைத்தனர்.

 

ஜி.பி.வெங்கிடு கோபிச்செட்டிபாளயம் பேருந்து நிலையத்தை அடுத்த பெரியார் மைதானம் எதிரில் தங்கம் தேனீரகம் என்ற டீ கடையும் அதில் புத்தக விற்பனையும் செய்து வந்தார். கோபிசெட்டிபாளையத்தில் எங்கும் நக்கீரன் இல்லாதபோது, இவர் கடையில் மட்டும் ஸ்டால் போஸ்டர்களுடன் நக்கீரன் விற்பனைக்கு இருந்தது. செங்கோட்டையனின் கூலிப்படை மிரட்டிப் பார்த்தது. ஆனால் ஜி.பி.வெங்கிடோ "எனது கடையில் நக்கீரன் விற்பனை செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்" எனப் போர் குணத்துடன் பதில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் அமைச்சரின் கூலிப்படையினர் கூட்டத்தை அதிகமாகச் சேர்த்துவந்து வெங்கிடுவின் தேனீர் கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அப்போதும் அசரவில்லை வெங்கிடு. நொறுக்கப்பட்ட கடையில் இருந்தவாரே நக்கீரன் இதழை விற்பனை செய்தார்.

 

Ad


எந்தச் செங்கோட்டையன் தனது கடையை அடித்து நொறுக்கினாரோ அதே செங்கோட்டையனை எதிர்த்து 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மிகவும் எளிமையாக மக்களிடம் பழகினார். தொகுதியில் ஏராளமான நலத் திட்டங்கள் இவர் காலத்தில் செய்துள்ளார். தி.மு.க.வில் இப்படிப்பட்ட எளிமை மிகு கொள்கைவாதிகளை இப்போது காண்பது அரிதுதான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.