Skip to main content

ப.சி.க்கு எதிராக காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ...?!!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

பங்காளி பகையாளியாவதும், பகையாளி உறவாவதும் தேர்தலின் பொழுது நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான் அதில் ப.சிதம்பரம் மட்டும் விதிவிலக்கா என்ன?. ப.சி.யால் இரண்டு தடவை எம்.எல்.ஏவான ஒருவர் ப.சி.க்கு எதிராகவும், சொந்த கட்சிக்கு எதிராகவும் வாக்கு சேகரித்து வருவது தான் காங்கிரஸார் மத்தியில் நிலவும் கலட்டாவே...

 

Former MLA of Congress against to chithamparam...? !!


சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. பர்மா காலனி, என்.ஜி.ஓ.காலனி, வைரவபுரம், நெசவாளர் காலனி, சங்கந்திடல் உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் ஏறக்குறைய 13 ஆயிரம் வீடுகளும், 23 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். இதற்கு முன்பு 10 வருடங்களாக சங்கராபுரம் ஊராட்சியின் தலைவராக இருந்தவர் காங்கிரஸை சேர்ந்த மாங்குடி என்பவர். இந்தமுறை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலைவர் பதவி பெண்ணுக்கு என மாறிய நிலையில்,  காங்கிரஸார் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஒத்துக்கொண்ட நிலையில் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடியின் மனைவி தேவி இந்த முறை ஊராட்சிக்கான தலைவர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவ்வேளையில், ப.சி.யின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்தின் ஆதரவில் கல்லூரி தாளாளர் அய்யப்பனின் மனைவி பிரியதர்ஷினி போட்டி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ப.சி. மற்றும் கட்சியினரின் ஆதரவு தேவி மாங்குடிக்கு இருக்கும் பட்சத்தில், கட்சிக்காரரும், ப.சி.யின் ஆதரவாளருமான முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்தின் ஆதரவு போட்டி வேட்பாளருக்கா..? என காங்கிரஸார் மத்தியில் வழக்கம்போல் குழப்பமும், கண்டனமும் ஒரு சேர நிலவியது.

 

Former MLA of Congress against to chithamparam...? !!

 

இதையெல்லாம் கண்டுகொள்ளாத முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரமோ, கட்சிக்கு விரோதமாக போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்க ஆரம்பித்தார். இது மேலும் பிரச்சனையை ஏற்படுத்த விவகாரமோ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு செல்ல, அவர்களோ, " இவ்விவகாரத்தை தொகுதியின் எம்.எல்.ஏவான கே.ஆர்.ராமசாமி பார்த்துக்கொள்வார்." என ஒதுங்கி கொண்டது. எனினும் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரமோ அவருடைய நிலைப்பாட்டை மாற்றவில்லை. விவகாரம் முற்றுவதைக் கண்ட ப.சி.யோ சனிக்கிழமையன்று சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் தேவிமாங்குடிக்காக காரைக்குடி என்.ஜி.ஓ.காலணி, பர்மா காலணி மற்றும் அமராவதிபுதூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமையன்று ப.சி. எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் சென்று போட்டியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தது முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம் தரப்பு.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய முன்னாள் எம்.எல்.ஏ.வை பதவி நீக்கம் செய்யவேண்டுமென உள்ளூர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கி தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றாலும், ப.சிதம்பரத்தால் 1996ம் ஆண்டு ஒரு முறையும், 2006ம் ஆண்டு மறுமுறையும் எம்.எல்.ஏ-வான சுந்தரத்தின் எதிர் நடவடிக்கைகளால் துவண்டுள்ளனர் காங்கிரஸார். இதனால் காங்கிரஸார் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.