Skip to main content

முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜாவின் படத்திறப்பும்; முதல்வரின் சேலம் மாவட்ட சுற்றுப்பயண விவரமும்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Former MLA Chief Minister attends the opening ceremony of Veerapandi Raja!

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (11/12/2021) சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இருந்து நாளை (11/12/2021) காலை கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து தனிவிமானம் மூலம் சேலம் செல்லவுள்ளார். முதலமைச்சருடன் அமைச்சர்களும் சேலம் செல்கின்றனர். 

 

சேலம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பின்பு, சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக அரசு விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் 30,000- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் நேரில் வழங்குகிறார். 

 

இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

 

அரசு விழாவை முடித்துக் கொண்டு, ஐந்து ரோட்டில் உள்ள ஶ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழாவிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் டாக்டர் பிரபு செய்து வருகிறார். 

 

அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு மீண்டும் சேலம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். 


முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்ட  காவல்துறையினர்  பாதுகாப்பு நடவடிக்கைகளையும் , கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.