Skip to main content

வரி உயர்வு பிரச்சனையில் முன்னாள் அமைச்சரின் போர்கொடியும்; இன்னாள் அமைச்சரின் சமாளிப்பும்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

திருச்சி மாநகராட்சியில் பலமடங்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 61 முதல் 65 ஆவது வரை உள்ள வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் கோரியும் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது.

 

Former minister's war on tax hike; Another minister's deal!

 

திருச்சியை அடுத்த காட்டூர் ஆயில் மில் பகுதியிலிருந்து திருவெறும்பூர் வரை நடைபெற்ற மனிதச்சங்கிலியைத் தொடக்கி வைத்து திருச்சி மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு பேசினார்.

திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, கீழக்கல்கண்டார்க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய 4 ஊராட்சிகளையும் கடந்த 2015 ல், மாநகராட்சிக்குள்பட்ட 61 முதல் 65 வரை 5 புதிய வார்டுகளாக தமிழக அரசு இணைத்தது. மாநகராட்சி ஆன பிறகு இதுவரை எந்தவித வளர்ச்சிப் பணிகளும், அடிப்படை வசதிகளும் இங்கு நடைபெறவில்லை.

 

Former minister's war on tax hike; Another minister's deal!

 

ஆனால் மாநகராட்சி நிர்வாகம் பலமடங்கு வீட்டு வரியை மட்டும் தற்போது உயர்த்தியுள்ளது. மூன்றாண்டுகள் முன் தேதியிட்டு உயர்த்தியுள்ளதால் வீட்டிற்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, உயர்த்தப்பட்ட வீட்டு வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சட்டசபையில் இதுகுறித்து அன்பில்மகேஷ் பேசினார். உடனே துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இனியும் தாமதித்தால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் அளித்த உறுதியின்படி உயர்த்தப்பட்ட வீட்டு வரியை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வரி உயர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தி திருச்சி மாநகர குடியிருப்போர் நலக் கூட்டமைப்புச் சார்பில் சுமார் 4 ஆயிரம் தபால் வரை திருச்சி மாநகராட்சிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதன் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம். 

 

Former minister's war on tax hike; Another minister's deal!


இதற்கிடையில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முதல்-அமைச்சரின் ஆலோசனையின் படி வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்கு ஆவன செய்யப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Former minister's war on tax hike; Another minister's deal!

 

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை புதிதாக உருவாக்கப்பட்ட 61-65 வார்டுகளுக்கு வரி உயர்வு, உயர்த்தப்பட்ட வரிக்கு முந்தைய 2 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையினை வசூல் செய்வது குறித்து அந்தந்த பகுதி நலச்சங்கங்கள், மாநகர குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்து பேசி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, ஆணையரிடம் பேசி உள்ளேன். என்று செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளனார்.

மக்கள் பிரச்சனையில் முன்னாள் அமைச்சரும் இன்னாள் அமைச்சரும் தலையிட்டு சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.