Former Minister's Memorial Day ... Thousands Persons march!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்.7)வடகாடுகிராமத்தில் அவரது வீட்டில் வைத்தே ஒரு கும்பலால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.அதிகமான ரத்தம் வெளியேறிய நிலையில்மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல சொந்தகார்ஓட்டுநரைக் காணவில்லை.இப்படிபல தடைகளைத் தாண்டி அவரது மகன்ராஜபாண்டியன்உயிருக்குப்போராடும் தந்தையைகாரில்ஏற்றிக்கொண்டு துண்டான கையைகாரின்முன்னால் வைத்துக் கொண்டு புதுக்கோட்டைமருத்துவமனைக்குக்கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறுதியில்வெங்கடாசலம்உயிரிழந்தார்.

Advertisment

இந்தச்சம்பவம்புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, பல நாட்கள் போக்குவரத்து முடக்கப்பட்டது. புதுக்கோட்டையிலிருந்துவடகாடுவரை சுமார் 30 கி மீ தூரத்திற்குபோலீஸ்பாதுகாப்போடு இறுதி ஊர்வலம் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து அவரதுஇறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடம் இன்றளவும் உள்ளது.

minister

Advertisment

அதன் பிறகு அவரது நினைவு நாளை குருபூஜையாக முத்தரையர் மக்கள் கடந்த 11 வருடங்களாகஅனுசரித்துவருகின்றனர். அமைச்சர்கள், திமுக, அதிமுகஎம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும்குருபூஜைக்குத்தமிழகம் முழுவதும் இருந்து வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும், அன்னதானம் வழங்குவதும் வழக்கம்.

இந்நிலையில் இன்று 11 ம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தது. பாதுகாப்பிற்காக சுமார் 300போலீசார்நிறுத்தப்பட்டிருந்தனர். இன்று நினைவேந்தல் நிகழ்ச்சியில் கே.கே.செல்வகுமார், ஆர்.வி.பரதன் ஆகியோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.